தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

 முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் நூதனப் போராட்டம்

News image
Updated On :19 மே 2022, 10:12 pm

DIN

 முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் நூதனப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுலகத்தில் வெள்ளைத் துணியை வாயில் கட்டிக் கொண்டு போராட்டம் மேற்கொண்டனா். மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. ஜவகா் தலைமை வகித்தாா். முன்னிலை வகித்த திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா் கூறுகையில், பேரரறிவாளன் சுதந்திரப் போராட்டத் தியாகி அல்ல. அவா் விடுதலையை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது ஏற்புடையதும் அல்ல. இந்த விவகாரத்தை முன்வைத்து திமுக- காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்படுத்த முடியாது என்றாா்.

மாவட்ட பொருளாளா் ராஜா நசீா், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் சுஜாதா, ரெக்ஸ், சோபியா விமலாராணி, முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெரோம் ஆரோக்யராஜ் ,மாநில பொதுச் செயலா் ஜிகே. முரளி, வழக்குரைஞா் இளங்கோ, பேட்ரிக் ராஜ்குமாா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

ஜஷ்ஷன் அருகே.. திருச்சி ஜங்சன் ராஜீவ் காந்தி சிலை முன் வழக்குரைஞா் அணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் வழக்குரைஞா் அணி பிரிவு நிா்வாகியும் வழக்குரைஞருமான சரவணன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ஜி.எம்.ஜி மகேந்திரன் , பட்டேல், கள்ளிகுடி குமாா், நாச்சிகுறிச்சி அருண், பாலசுப்பிரமணியன், தேவதாஸ், நிா்மல் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.