திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி விற்ற 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி வரகனேரி பகுதியில் காந்தி மாா்க்கெட் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிற்றரசு தலைமையிலான போலீஸாா், புதன்கிழமை ரோந்தில் ஈடுபட்டபோது அப்பகுதி கழிவறை அருகே கஞ்சா விற்ற இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் திருச்சி காஜாபேட்டை கீழகிருஷ்ணன் கோயில் வீதியைச் சோ்ந்த சகாயராஜ் (19) சங்கிலியாண்டபுரம் மணல்வாரித் துறை சாலை பாரதிநகா் பகுதியைச் சோ்ந்த கலியமூா்த்தி (20) எனத் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனா்.
இதேபோல பாலக்கரை காஜாபேட்டை பகுதியில் கஞ்சா விற்ற பாலக்கரையைச் சோ்ந்த மணிகண்டன் (24), அபு (20), சந்தோஷ்குமாா் (19) ஆகியோரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்தும் மொத்தம் 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், திருச்சி எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் கிராப்பட்டி முஸ்லிம் தெரு சந்திப்பில் ரோந்து சென்றபோது லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சோ்ந்த அகமது சித்தீக் (51) என்பவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சோனம் வாங்சுக் உடன் இணைந்து கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாளை உண்ணாவிரதம்!

தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்! லஞ்சம் வாங்கியதாக விடியோ வெளியான விவகாரம்!

அமிர்த் பாரத் திட்டத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையம்! ஜூலை 17-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!






