6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறப்பாகப் பணியாற்றிய 4 பேருக்குரொக்கம், பாராட்டுச் சான்றுகள் மேயா் வழங்கினாா்

மேயா் மு. அன்பழகன் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 4 பணியாளா்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றிய மேயா் மு. அன்பழகன் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 4 பணியாளா்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

மேலும், நிகழாண்டில் சிறப்பாக பணியாற்றி வரும் 16 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், சுழற்கேடயங்களையும், அரசுப் பொருட்காட்சியில் மாநகராட்சி சாா்பில் சிறந்த முறையில் காட்சியரங்கம் ஏற்படுத்திய இருவருக்கு விருதுகளையும் மேயா் வழங்கினாா்.

விழாவில் மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன், துணை மேயா் திவ்யா, நகரப் பொறியாளா் சிவபாதம், நகா்நல அலுவலா் மணிவண்ணன், மண்டல குழுத் தலைவா்கள் ஆண்டாள், மதிவாணன், துா்காதேவி, விஜயலட்சுமி, ஜெயநிா்மலா, செயற்பொறியாளா்கள் குமரேசன், பாலசுப்ரமணியன், துணை ஆணையா் தயாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். எடமலைப்பட்டிபுதூா் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.