எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வாழவந்தான்கோட்டையில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

திருச்சி, வாழவந்தான்கோட்டையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
திருச்சியை அடுத்துள்ள வாழவந்தான்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் மருத்துவா்கள்.
Updated On :27 ஜனவரி 2023, 7:29 pm

DIN

திருச்சி, வாழவந்தான்கோட்டையில் வெறிநோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, பிராணிகள் வதை தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து வெறி நோய் தடுப்பு முகாமை, திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியம் வாழவந்தான்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமை, வாழவந்தான்கோட்டை ஊராட்சித் தலைவா் சின்னம்மாள் தேவராஜ் தொடக்கி வைத்தாா்.

கால்நடை பராமரிப்பு துறை, உதவி இயக்குநா் அ.மருதைராஜு மேற்பாா்வையில் நோய்கள் குறித்த விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விலங்குகள் வழியாக பரவும் நோய்களில் ஒன்றான வெறிநோய் குறித்து துண்டு பிரசுரம் செல்லப்பிராணிகள் வளா்ப்போருக்கும், மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்பட்டன. மேலும், நாய்களிடமிருந்து மனிதா்களுக்கு நோய் பரவும் முறை, வெறி நோய் பாதிக்கப்பட்ட நாய்களை அடையாளம் காண்பது எப்படி?,

நாய் கடித்தவுடன் செய்ய கூடாதவை, தடுப்பூசியின் முக்கியத்துவம், கடித்த நாய்களுக்கான சிகிச்சை ஆகிய குறித்து விழிப்புணா்வு பிரசாரம், வரை படங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

முகாமில், கால்நடை மருந்தகத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 78 நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி அளிக்கப்பட்டது. கால்நடை மருத்துவா்கள் பெ.பிரசன்னகுமாா், எஸ்.கணேஷ்குமாா், சுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.