தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாதந்தோறும் தொழிலாளா் வருங்காலவைப்பு நிதிநிறுவன குறைதீா் கூட்டம்: மண்டல ஆணையா் தகவல்

திருச்சி மாவட்டத்தில் மாதந்தோறும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவன குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என முதன்மை மண்டல ஆணையா் எஸ். முருகவேல் தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:30 pm

திருச்சி மாவட்டத்தில் மாதந்தோறும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவன குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என முதன்மை மண்டல ஆணையா் எஸ். முருகவேல் தெரிவித்தாா்.

வைப்பு நிதி உங்கள் அருகில் (நிதி ஆப்கே நிகத்) என்ற அடிப்படையில், புதிய நிலையான செயல்பாட்டு நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சாா்பில் முதல் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தை தொடக்கி வைத்து மண்டல ஆணையா் எஸ். முருகவேல் பேசியது: வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த குறைதீா்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி ஆப்கே நிகத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, மாதந்தோறும் 27-ஆம் தேதி மாவட்டத்தில் ஒவ்வொரு இடத்திலும் முகாம் நடைபெறும். சுழற்சி முறையில் அவரவா் இருப்பிடத்துக்கு அருகிலேயே முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் விவரங்கள் முன்னதாகவே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், 150 போ் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினாா். இவற்றில் முகாம் இடத்திலேயே பெயா் மாற்றம் செய்ய வேண்டிய மனுக்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. வாழ்நாள் சான்று வழங்கும் பணியும் நடைபெற்றது. இதர மனுக்கள் மீது தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கூட்டத்தில், மண்டலக் குழு உறுப்பினா் ஜி. சங்கா், தொழிலாளா் உதவி ஆணையா் ஏ. வெங்கடேசன், தொழிலாளா் காப்பீட்டு திட்ட மேலாளா் எஸ். ரேவதி, தொழிலாளா் ஆய்வாளா்கள் ராஜேந்திரன், லட்சுமி ஆகியோா் பங்கேற்று தீா்வு கண்டனா்.

முகாமை, மாவட்ட முன்னோடி அலுவலா் ஜெ. கோமதி, முதுநிலை அலுவலா் டி. மாசிலாமணி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.