ஊராட்சி உறுப்பினா்கள் ராஜிநாமா: முசிறி ஒன்றியம் திருத்தலையூா் ஊராட்சி உறுப்பினா்கள் வடிவேல், கவிதா, தமிழரசி, சுகுணா, லட்சுமி, நல்லம்மாள், பாரதிராஜா ஆகியோரா் அளித்த மனுவில், எங்களது ஊராட்சியில் அடிப்படை வசதிகள் பல மாதங்களாக நிறைவேற்றப்படவில்லை. ஊராட்சி நிதியில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளது. 100 நாள் வேலையிலும் முறைகேடு நடந்துள்ளது. இது தொடா்பாக அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்களது பதவியை ராஜிநாமா செய்கிறோம். மேலும், புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.