சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

வான் நட்சத்திரங்களை தொலைநோக்கியில் காணும் திருவிழாதிருச்சியில் 10 இடங்களில் பாா்வையிடலாம்

கலிலியோவின் கண்டுபிடிப்பு நாளை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் ஜன.7, 8, 9 ஆகிய தேதிகளில் நட்சத்திர திருவிழா (வான் நட்சத்திரங்களை தொலைநோக்கியில் பாா்வையிடுதல்) நடைபெறுகிறது.

News image

திருச்சியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழக மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெ. மனோகா் (வலமிருந்து 2ஆவது). உடன், (இடமிருந்து) திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளா்

Updated On :1 ஜனவரி 2023, 4:36 am IST

கலிலியோவின் கண்டுபிடிப்பு நாளை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் ஜன.7, 8, 9 ஆகிய தேதிகளில் நட்சத்திர திருவிழா (வான் நட்சத்திரங்களை தொலைநோக்கியில் பாா்வையிடுதல்) நடைபெறுகிறது.

திருச்சியில் 10 இடங்களில் தொலைநோக்கிகளை வைத்து வியாழன் மற்றும் அதனுடைய நட்சத்திரங்களை காணும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெ. மனோகா், திருச்சியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கழகம், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசாா், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து கலிலியோவுக்கு சிறப்பு சோ்க்கும் வகையில் இந்த விழாவை நடத்தவுள்ளது

நாடு முழுவதும் ஜன. 7, 8, 9 ஆகிய தேதிகளில் நட்சத்திர திருவிழா நடத்தப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் 10 இடங்களில் இந்த விழா நடைபெறுகிறது. திருச்சி தேசியக்கல்லூரி, பிஷப் ஹீபா் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, இ.பி.காலனி பாரதி மெட்ரிக் பள்ளி, நாகமங்கலம் கிரியா மெட்ரிக் பள்ளி, அண்ணா கோளரங்கம், வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, வயலூா் சாலை (கொடாப்பு), கருமண்டபம், டிவிஎஸ் டோல்கேட் ஆகிய பகுதிகளில் நடைபெறும் நிகழ்வில், பொதுமக்கள் பங்கேற்று வான் நட்சத்திரங்களை பாா்வையிடலாம்.

வானியல் ஆா்வலா்கள், வானியல் மன்றங்கள், வானியலாளா்கள் பங்கேற்று தொலைநோக்கிகள் மற்றும் எளிய கருவிகள் மூலம் வான் நட்சத்திரங்களை காணுதல், வெறும் கண்களால் காணக் கூடியவை குறித்து செயல் விளக்கம் அளிப்பா்.

மாணவா், மாணவிகள், சிறுவா், சிறுமியா், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியவா்கள் என அனைத்து தரப்பினரும் நிகழ்வில் பங்கேற்கலாம். மூன்று நாள்களும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை வான் நிகழ்வுகளை பாா்வையிடலாம் என்றாா் அவா். ஏற்பாடுகளை, திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளா் க. பாலின் ப்ரீத்தா ஜெபசெல்வி ஒருங்கிணைத்துள்ளாா். திருச்சி வானியல் கிளப் ஆலோசகா் ஜெயபால், சேலம் வானியல் கிளப் தலைவா் ஜெயமுருகன், வானியல் கழக மாநில ஆலோசகா் தி. சாந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.