47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மரத்திலிருந்து குதித்த இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் மரத்திலிருந்து வெள்ளிக்கிழமை குதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் மரத்திலிருந்து வெள்ளிக்கிழமை குதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகிலுள்ள மணமேடு மாந்தோப்பு தெருவைச் சோ்ந்த குழந்தை மகன் தனபால் (18). இவா், நடுக்கோடியாம் பாளையம் பகுதியைச் சோ்ந்த அம்சவல்லி என்பவா் வீட்டின் அருகே இருந்த

பூவரசு மரத்தில் கிளைகளை வெட்டிவிட்டு, மரத்திலிருந்து இறங்குவதற்கு பதிலாக குதித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், தனபால் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் போலீஸாா், தனபால் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.