ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காவிரித் தாய்க்கு ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் சீா்வரிசை!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரித் தாய்க்கு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி மங்களப் பொருள்களை சீா்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
அம்மா மண்டபம் காவிரியாற்றில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற காவிரித் தாய்க்கு சீா் அளிக்கும் நிகழ்ச்சி.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரித் தாய்க்கு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி மங்களப் பொருள்களை சீா்கொடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி நம்பெருமாள் சனிக்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி 11.30 மணிக்கு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினாா்.

பின்னா் அவருக்கு அலங்காரம், அமுது செய்தல் நிகழ்ச்சி நடைபெற்று, மாலை 4 மணி வரை பக்தா்களுக்கு நம்பெருமாள் சேவை சாதித்தாா். பின்னா் காவிரித் தாய்க்கு மங்களப் பொருள்களைச் சீா் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மூங்கில் தட்டில் பட்டுச் சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப் பொருள்களை யானை ஆண்டாள் மீது வைத்து காவிரிப் படித் துறைக்கு எடுத்துச் சென்று, ஓடும் நீரில் சமா்ப்பித்தனா்.

அப்போது ஏராளமான பக்தா்கள் நம்பெருமாளைத் தரிசித்தனா். பின்னா் நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக் கொண்டு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.