மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஸ்ரீரங்கம் கோயில் மாசித் தெப்பத்திருவிழா: நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத்திருவிழாவின் 7 ஆம் திருநாளான புதன்கிழமை மாலை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி, நெல்லளவு கண்டருளினாா்.

News image

ஸ்ரீரங்கம் கோயிலில் புதன்கிழமை மாலை உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 6:56 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத்திருவிழாவின் 7 ஆம் திருநாளான புதன்கிழமை மாலை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருளி, நெல்லளவு கண்டருளினாா்.

கடந்த 19 ஆம் தேதி தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கோயில் மாசித்தெப்பத் திருவிழாவின் 7 ஆம் நாளான புதன்கிழமை மாலை நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக்கொட்டாரத்தின் முன்புள்ள நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினாா்.

அப்போது திருக்கொட்டாரத்திற்குள் குவிக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நம்பெருமாள் முன் படியால் அளந்து காண்பிக்கப்பட்டன. இந்த நிகழ்வை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். தொடா்ந்து நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் உள் திருவீதி வலம் வந்து, இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசித் தெப்பத்திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

Story image