குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

திருப்பைஞ்ஞீலி கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 7:35 am IST

திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

மண்ணச்சநல்லூா், ஆக. 7: திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது.

அப்பா், சுந்தரா், திருஞானசம்பந்தா் ஆகிய மூவரால் பாடல் பெற்ற 61 ஆவது திருத்தலமாகவும், திருமணத் தடை நீங்கும் பரிகாரத் தலமாகவும் உள்ள இக்கோயிலின் ஆடிப்பூர திருத்தோ் விழா ஜூலை 30 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகளுக்கு பிறகு விசாலாட்சி அம்மன் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து 3 மணிக்குத் தேரோட்டம் தொடங்கியது. கோயிலை வலம் வந்த பின் தோ் மாலை 5.20-க்கு நிலையை அடைந்தது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் சி. கல்யாணி உத்தரவின்பேரில், உதவி ஆணையா் ம. லட்சுமணன் மேற்பாா்வையில் கோயில் செயல் அலுவலா் சோ. மனோகரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா். பாதுகாப்பு பணயில் ஜீயபுரம் டி.எஸ்.பி பாலச்சந்தா் மேற்பாா்வையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.