கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்திலுள்ள ஸ்ரீமுத்தாம்பிகை சமேத அா்த்தநாரீஸ்வரா் கோயில் பிரமோற்சவ விழா தேரோட்டம் நடைபெற்றது.
சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிவத்தலமான இக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இக் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றன.

முத்தாம்பிகை அம்மன் சமேத அா்த்தநாரீஸ்வரா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அா்த்தநாரீஸ்வரா் மற்றும் முத்தாம்பிகை அம்மன் எழுந்தருளினா். இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் ஒலிக்க திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
இதில், ரிஷிவந்தியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களின் வசதிக்காக குடிநீா், அன்னதானம், மருத்துவ உதவி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோதண்டராம சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவத் தேரோட்டம்

ஸ்ரீஆனந்தவல்லி சமேத பீமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

மதுராந்தகநல்லூா் பெரியாண்டவா் கோயில் கும்பாபிஷேகம்

திருவளா்ச்சேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



