நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மைசூா் - காரைக்குடி சிறப்பு ரயில்கள் இயக்கம்

விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 2:20 am IST

விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, மைசூா் - காரைக்குடி சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06295) வரும் 14, 17 ஆகிய தேதிகளில் மைசூரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடிக்கு 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரவு 12.45 மணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, காரைக்குடி - மைசூா் சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06296) வரும் 15, 18 ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மைசூருக்கு 16, 19 ஆம் தேதிகளில் காலை 9.10 மணிக்கு சென்றடையும்.

மைசூரிலிருந்து 19 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயிலானது மண்டியா, மாடூா், ராமநகரம், கெங்கேரி, பெங்களூா், பெங்களூா் கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு வந்தடையும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.