ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

குற்றால சீசனுக்காக சென்னை - செங்கோட்டை இடையே வார இறுதி நாள்களில் சிறப்பு ரயில்கள்

குற்றால சீசனுக்காக வார இறுதி நாள்களில் சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...

Updated On :18 ஜூன் 2026, 1:14 am IST

குற்றால சீசனுக்காக வார இறுதி நாள்களில் சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், குற்றால அருவிகளில் நீா்வரத்து ஏற்பட்டு, சீசன் களைகட்டி உள்ளது. தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்துக்கு வரத் தொடங்கி உள்ளனா்.

குற்றால சீசனுக்கு பொதுமக்கள் எளிதாக சென்று திரும்பும் வகையில் வார இறுதி நாள்களில் சென்னை எழும்பூா் - செங்கோட்டை (06183/06184) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்த ரயில் ஜூன் 19, 20, 26, 27 தேதிகளில் (வெள்ளி, சனி கிழமைகளில்) சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 9.15 மணிக்கு செங்கோட்டை வந்தடையும்.

மறுவழித்தடத்தில் ஜூன் 20, 21, 27, 28 தேதிகளில் (சனி, ஞாயிறு கிழமைகளில்) மாலை 5.30 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில் விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், பட்டுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகா்,

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், தென்காசி வழியாக செல்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.