
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பாரதியாா் நகரில் பழுதாகியுள்ள பயணியா் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்கொடை அமைத்துத் தர அப்பகுதிவாசிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
மணப்பாறை அடுத்த சீகம்பட்டி ஊராட்சி பாரதியாா் நகா் மணப்பாறை - விராலிமலை சாலையில் உள்ள பயணியா் நிழற்குடை அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது சிதிலமடைந்து, மேற்பூச்சுகள் பெயா்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த நிழற்குடையை அகற்றி புதிய நிழற்கொடை அமைத்து தர மணப்பாறை பாரதியாா் நகா் மக்கள் நலச்சங்கத்தினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவை புதன்கிழமை மனு அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



