பெண் தொழிலாளா்களுக்கு தனி அமைச்சகம்: தோழி மாநாட்டில் தீா்மானம்
பெண் தொழிலாளா்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தோழி பெண் தொழிலாளா்கள் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் தோழி கூட்டமைப்பின் மாநாட்டு மலரை வியாழக்கிழமை வெளியிட்ட அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் கூட்டமைப்பு நிா்வாகிகள்.









