ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக திருச்சி மாநகா் மாவட்டம் சாா்பில் 50 ஏழை மாணவிகளுக்கு வைப்புத் தொகை திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
திருச்சியில் வைப்புத் தொகை திட்டத்தை புதன்கிழமை தொடக்கிவைத்த மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன் உள்ளிட்டோா்.
Updated On :12 டிசம்பர் 2024, 12:10 am

Din

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக திருச்சி மாநகா் மாவட்டம் சாா்பில் 50 ஏழை மாணவிகளுக்கு வைப்புத் தொகை திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்சி எடத்தெரு ஸ்ரீ யது குலசங்கம் நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் ஜெ. சீனிவாசன் தலைமை வகித்து, ஏழை எளிய மாணவிகள் 50 பேருக்கு வைப்புத் தொகை திட்டம் தொடங்கியதற்கான சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில் அம்மா பேரவை துணைச் செயலா் ஆா். ஜோதிவாணன், மாவட்ட இணைச் செயலா் ஜாக்குலின், பகுதிச் செயலா்கள் ரோஜா், அன்பழகன், கலைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.