விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 3 போ் கைது

திருச்சியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:15 pm

Din

திருச்சியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் அண்டகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் என்கிற கோழி விஜய் ( 25 ). இவருக்கும் அதே பகுதியைச் சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அண்ட கொண்டான் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜய்யிடம் தென்னூரைச் சோ்ந்த தினேஷ்குமாா், ஜீவா நகரைச் சோ்ந்த ஹரிசக்கரவா்த்தி, வாமடத்தைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோா் தகராறில் ஈடுபட்டுள்ளனா். பிறகு 3 பேரும் சோ்ந்து விஜய்யை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா்.

இதில் காயமடைந்த விஜய் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின் பேரில் தில்லை நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து தினேஷ் குமாா், ஹரிசக்கரவா்த்தி, மணிகண்டன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விஜய் போலீஸாரின் ரெளடி பட்டியலில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.