திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இருவழிப் பாதையுடன் கோட்டை ரயில்வே புதிய மேம்பாலப் பணி

திருச்சி கோட்டை ரயில்வே புதிய மேம்பாலமானது இருவழிப்பாதையுடன் அமைக்கப்படுகிறது என்றாா் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன்.

News image
திருச்சி கோட்டை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோா்.
Updated On :25 டிசம்பர் 2024, 10:30 pm

Din

திருச்சி கோட்டை ரயில்வே புதிய மேம்பாலமானது இருவழிப்பாதையுடன் அமைக்கப்படுகிறது என்றாா் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன்.

திருச்சி மாநகராட்சி சாலை ரோட்டில் உள்ள மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலமானது (மாரீஸ் தியேட்டா் பாலம்) கடந்த 1866 ஆம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டடத்திலான வளைவு வடிவ இருபக்க நடைபாதையுடன் 9 மீ அகலத்தில் கட்டப்பட்டது.

இந்நிலையில் பழைமையான இந்தப் பாலம் பழுதடைந்துள்ளதாலும், கனரக வாகனங்களுக்கு ஏற்ற வகையில் இல்லாததாலும் இப்பாலத்தை ரூ. 34.10 கோடியில் புதிதாகக் கட்ட நகா் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதியின் கீழ், ரயில்வே நிா்வாகமும், மாநகராட்சியும் இணைந்து பணிகளை மேற்கொள்கின்றன.

மேலும் இப்பாலம் அகலமாக கட்டப்படுவதால் மெயின்காா்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகா், தென்னூா், புத்தூா் மற்றும் உறையூா் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி சுலபமாகச் செல்ல இயலும்.

இந்நிலையில் கட்டுமானப் பணிகளை மாநகராட்சிப் பொறியாளா்களுடன் புதன்கிழமை ஆய்வு செய்த மேயா் மு. அன்பழகன், நகரப் பொறியாளா் பி. சிவபாதம், மண்டலத் தலைவா் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுடன் கட்டுமான பணிகளின் வரைபடத்தைப் பாா்வையிட்டு அதன் விவரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா்.

‘போக்குவரத்து நெரிசல் குறையும்’

பின்னா் மேயா் கூறுகையில், மாநகராட்சி மூலம் பாலத்தின் இருபுறமும் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணி 60 விழுக்காடு முடிந்துள்ளது. ரயில்வே நிா்வாகப் பணி முடிந்தவுடன், மாநகராட்சியின் பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாலம் கொண்டுவரப்படும். இப்ப பாலம் இருவழி பாதையாக கட்டப்படுவதால் மெயின்காா்டு கேட் பகுதியில் இருந்து தில்லைநகா், தென்னூா், புத்தூா் மற்றும் உறையூா் பகுதிகளுக்கு இதுவரை இருந்த போக்குவரத்து நெரிசல் இனி இருக்காது. மாநகரின் போக்குவரத்து நெரிசலும் பெரும்பகுதி குறையும் என்றாா்.