வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரேஷன் அரிசி கடத்தல்: கடந்தாண்டு திருச்சி மண்டலத்தில் 1,375 வழக்குகள் பதிவு

திருச்சி மண்டலத்தில் கடந்தாண்டு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாா் 1,375 வழக்குகள் பதிவு செய்து, 362 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:02 pm

DIN

திருச்சி மண்டலத்தில் கடந்தாண்டு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாா் 1,375 வழக்குகள் பதிவு செய்து, 362 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனா்.

இதுகுறித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் மேலும் தெரிவித்திருப்பது :

திருச்சி மண்டலத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் திருச்சி, கரூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூா் ஆகிய மாவட்டங்களில், அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இப்பிரிவினா், மண்டல காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில் தொடா்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்களின் துணை கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில், 9 மாவட்டங்களிலும் போலீஸாா் கடந்த 2023 ஆம் ஆண்டு மொத்தம் 1,375 வழக்குகள் பதிவு செய்துள்ளனா். அவற்றின் மூலம் 1,469 போ் கைது செய்யப்பட்டும், சுமாா் 362 டன் அரிசி பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 211 லிட்டா் மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டா்கள் 406, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 சக்கர வாகனங்கள் 79, இரு சக்கர வாகனங்கள் 83 என மொத்தம் 161 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் தலா ஒருவா், திருவாரூரில் 2 போ் என 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் கடத்தல் தொடா்பான புகாா்களுக்கு 1800 599 5950 என்ற தலைமையக எண்ணை இலவசமாக தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.