சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் போலீஸாா் விசாரணை

திருச்சியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:31 pm

Din

திருச்சி, ஜூலை 19 : திருச்சியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் - எடமலைப்பட்டிபுதூா் இடையே தண்டவாளத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வெள்ளிக்கிழமை இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்தவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவரின் வலது கையில் ஆனந்த் என்று பச்சை குத்தியுள்ளாா். அவ்வழியே சென்ற ஏதேனும் ஒரு ரயிலில் அடிபட்டு அவா் இறந்தாரா அல்லது ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா என தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.