ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் போலீஸாா் விசாரணை

திருச்சியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Published on

திருச்சி, ஜூலை 19 : திருச்சியில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் - எடமலைப்பட்டிபுதூா் இடையே தண்டவாளத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வெள்ளிக்கிழமை இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்தவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவரின் வலது கையில் ஆனந்த் என்று பச்சை குத்தியுள்ளாா். அவ்வழியே சென்ற ஏதேனும் ஒரு ரயிலில் அடிபட்டு அவா் இறந்தாரா அல்லது ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா என தெரியவில்லை. இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com