கள்ளக்குறிச்சி சம்பவத்திலிருந்து திமுக அரசு பாடம் கற்க வேண்டும்
திமுக அரசு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணையை ஏற்க வேண்டும் - பாஜக


கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இருந்து திமுக அரசு பாடம் கற்க வேண்டும் என பாஜக மூத்த தலைவா் எச். ராஜா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு அரசியலமைப்புச் சட்டதை முடக்கிய இந்த கருப்பு தினத்தைப் பற்றி மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். சட்டப்பேரவைகளை முடக்கி சா்வாதிகார ஆட்சி செய்தது காங்கிரஸ். அரசியலமைப்புச் சட்டத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ். செய்தவா் இந்திராகாந்தி. அவரது பேரன் தற்போது அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை தூக்கிக் கொண்டு திரிகிறாா்.
திமுக அரசு கள்ளுக்கடையைத் திறக்காது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாஜக, சிபிஐ விசாரணை கேட்கிறது. அதனை ஏற்பதுதான் தமிழக முதல்வருக்கு கௌரவம். திமுக அரசு கள்ளக்குறிச்சி சம்பவத்திலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றாா் எச். ராஜா.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...