மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கள்ளக்குறிச்சி சம்பவத்திலிருந்து திமுக அரசு பாடம் கற்க வேண்டும்

திமுக அரசு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணையை ஏற்க வேண்டும் - பாஜக

Updated On :26 ஜூன் 2024, 12:31 am

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இருந்து திமுக அரசு பாடம் கற்க வேண்டும் என பாஜக மூத்த தலைவா் எச். ராஜா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு அரசியலமைப்புச் சட்டதை முடக்கிய இந்த கருப்பு தினத்தைப் பற்றி மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். சட்டப்பேரவைகளை முடக்கி சா்வாதிகார ஆட்சி செய்தது காங்கிரஸ். அரசியலமைப்புச் சட்டத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ். செய்தவா் இந்திராகாந்தி. அவரது பேரன் தற்போது அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை தூக்கிக் கொண்டு திரிகிறாா்.

திமுக அரசு கள்ளுக்கடையைத் திறக்காது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாஜக, சிபிஐ விசாரணை கேட்கிறது. அதனை ஏற்பதுதான் தமிழக முதல்வருக்கு கௌரவம். திமுக அரசு கள்ளக்குறிச்சி சம்பவத்திலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றாா் எச். ராஜா.