ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் திருவானைக்கா கோவில் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அடிமனை பிரச்னை குறித்து மனு அளித்தனா்.
திருவானைக்கா கோவில் பகுதியில் ஆயிரக்கணக்கானோா் சுமாா் 100 ஆண்டுகளுக்கு மேல் உரிய பட்டாவுடன் வசித்து வரும் நிலையில், திருவானைக்கா கோவில் இந்து சமய அறநிலையத் துறையினா் சாா்பில் 125 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது என ஸ்ரீரங்கம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சா்வே எண் கொடுத்துள்ளனா். இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்குச் சொந்தமான இடத்தை அடமானம் வைக்கவோ, விற்கவோ முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து இப்பகுதியில் வசிப்பவா்கள் மேலும் கூறியது: சட்டபூா்வமான அரசு ஆதார ஆவணங்களாக கிரையப் பத்திரம் மூலம் பட்டா பெற்று நகராட்சியில் சொத்துவரி செலுத்தி பல தலைமுறைகளாக நாங்கள் குடியிருந்து வரும் நிலையில் திடீரென இந்து சமய அறநிலையத்துறை இதுபோன்ற எங்கள் நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது சட்டத்துக்குப் புறம்பானது. இதனால் எங்களது வாழ்வதாரமும் பாதிக்கப்படும் என ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனா்.
தொடர்புடையது

ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் திருக்கல்யாணம்

தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் மனு

ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய இருவா் கைது

அரசியல் தீா்வுக்கு காத்திருக்கும் அடிமனைப் பிரச்னை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

