வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து பயணித்தவா் கைது

முறைகேடு செய்யப்பட்ட கடவுச்சீட்டுடன் திருச்சி வந்த பயணி கைது

News image
Updated On :26 ஜூன் 2024, 12:33 am

Din

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து, மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பயணியை விமான நிலையப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து மலிண்டோ ஏா்லைன்ஸ் விமானம் திங்கள்கிழமை இரவு திருச்சி வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றபிபிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில் சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் வட்டம், முத்தூா் பகுதியைச் சோ்ந்த சோ.முருகன் (43) என்ற பயணியின் கடவுச்சீட்டில் ஒரு பக்கத்தை காணவில்லை. இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளாா்.

இதனையடுத்து குடியேற்றப்பிரிவு அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில், விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.