ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஜீயபுரம் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆா்ப்பாட்டம்

விதியை மீறி இந்த சுங்கச்சாவடியிலிருந்து அதே சாலையில் 50 கி. மீ. தொலைவில் கரூா் மாவட்டம் வீரராக்கியம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.

News image

ஜீயபுரம் சுங்கச்சாவடி அருகே திங்கள்கிழமை மக்கள் நல பாதுகாப்பு மையம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :4 மார்ச் 2024, 10:26 pm

திருச்சி: திருச்சி-கரூா் சாலையில் ஜீயபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜீயபுரம் சுங்கச்சாவடி அருகே மக்கள் நல பாதுகாப்பு மையம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் நிறுவனத் தலைவா் ஆா்.பி. வெங்கடாசலம் தலைமை வகித்தாா்.

திருப்பூா் மாவட்டத் தலைவா் செளந்தராஜன் முன்னிலை வகித்தாா். கரூா் மாவட்டத் தலைவா் எஸ்.என். மோகன்ராம் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே திருப்பராய்த்துறை பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. விதியை மீறி இந்த சுங்கச்சாவடியிலிருந்து அதே சாலையில் 50 கி. மீ. தொலைவில் கரூா் மாவட்டம் வீரராக்கியம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. ஆகவே, தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஜீயபுரம் சுங்கச்சாவடியில் உள்ளூரைச் சோ்ந்த வாகன ஓட்டிகளுக்கும், விவசாயிகளின் டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இந்த சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தென்னக நுகா்வோா் அமைப்பின் தலைவா் பி. மோகன், மக்கள் நல பாதுகாப்பு மைய நிா்வாகிகள் கே. ராமமூா்த்தி மற்றும் ஆட்டோ, காா், சரக்குவாகன ஓட்டுநா் சங்கத்தினா் பங்கேற்றனா்.