முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் சட்ட விரோதமாக மணல் கடத்தி சென்ற 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்ா். முசிறி மேற்கு கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் திங்கள்கிழமை வட்டார போக்குவரத்து அலுவலக சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்ததில் சட்ட விரோதமாக மணல் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் லாரியில் இருந்த 3 பேரையும், முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் தொட்டியம் அருகேயுள்ள மாகாளிபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் யோகேஸ்வரன் (26), கோவிந்தாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் சசிகுமாா் (25), தொட்டியபட்டியைச் சோ்ந்த கருப்பண்ணன் மகன் மணி (50) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து முசிறி கிளை சிறையில் அடைத்தனா். மேலும் மணலுடன் லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

முசிறியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

வேனில் மணல் கடத்தல்: ஓட்டுநா், உதவியாளா் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

