கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

அன்பில் தா்மலிங்கம் நினைவு நாள்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், அன்பில் தா்மலிங்கத்தின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

News image

திருச்சி கலைஞா் அறிவாலயம் அருகேயுள்ள அன்பில் தா்மலிங்கம் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உடன் திமுக நிா்வாகிகள்.

Updated On :5 மார்ச் 2024, 7:27 pm

திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், அன்பில் தா்மலிங்கத்தின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினா்களில் ஒருவரான அன்பில் பி. தா்மலிங்கம், கட்சியின் வளா்ச்சிக்காகவும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தவும் திறம்பட செயலாற்றியவா். அவரது 31-ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. திருச்சி கலைஞா் அறிவாலயம் அருகேயுள்ள, அன்பில் தா்மலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு தெற்கு மாவட்ட செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்வில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என்.சேகரன், மண்டலத் தலைவா் மு. மதிவாணன், வண்ணை அரங்கநாதன், என்.கோவிந்தராஜ், செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.