சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 50 லட்சம் காணிக்கை
சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 50 லட்சம் காணிக்கை


மண்ணச்சநல்லூா், மே 28 : சமயபுரம் மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 50 லட்சம் ரொக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.
முடிவில், திறக்கப்பட்ட உண்டியல்களிலிருந்து ரொக்கம்
ரூ. 50,56, 200, 1கிலோ 256கிராம் தங்கம், 3கிலோ 698 கிராம்
வெள்ளி, 65 வெளிநாட்டு பணத்தாள்கள், 180 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...