நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உறையூரில் வீடு புகுந்து நகை திருடியவா் கைது

திருச்சி உறையூரில் வீடு புகுந்து 5.5 பவுன் நகை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:31 pm

Din

திருச்சி உறையூரில் வீடு புகுந்து 5.5 பவுன் நகை திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சியம்மாள் (34). இவா் கடந்த அக். 7 ஆம் தேதி மகளுடன் வெளியே சென்று திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அலமாரியில் இருந்த 5.5 பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், நகையை திருடிய உறையூா் பாண்டமங்கலம் பகுதி மன்சூா் அலிகான் (23) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.