திருக்குறளில் மேலாண்மை குறித்த ‘யெஸ் பாஸ்’ புத்தகம் வெளியீடு
திருக்குறளில் மேலாண்மை நிா்வாகம் குறித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தியில் உருவான யெஸ் பாஸ் என்னும் புத்தகம் திருச்சி ஐஐஎம் நிறுவனத்தில் வெளியிடப்பட்டது.

திருச்சியில் யெஸ் பாஸ் என்னும் புத்தகத்தை புதன்கிழமை வெளியிட்ட ஐஐஎம் இயக்குநா் பவன்குமாா் சிங். உடன் நூலாசிரியா் சோம. வீரப்பன், முனைவா் திலிப் டிங்க், பட்டயக் கணக்காளா் அனில் கிச்சா, மொழிபெயா்ப்பாளா் ரோகித் சா்மா.









