காதொலிக் கருவி பொருத்த 11 குழந்தைகள் தோ்வு
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற இலவச காது கேளாமை பரிசோதனை முகாமில் காதொலிக் கருவி (காக்ளியா் இம்பிளான்ட்) கருவி பொருத்த 11 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

திருச்சி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமைத் தொடக்கி வைத்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா். உடன் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் குமரவேல் உள்ளிட்டோா்.









