தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளத்தில் சிக்கியது ஆம்னி பேருந்து: போக்குவரத்து பாதிப்பு

திருச்சி ஜங்ஷன் அருகே மாநகராட்சி பராமரிப்புப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் புதன்கிழமை இரவு ஆம்னி பேருந்து சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

திருச்சியில் புதன்கிழமை இரவு பள்ளத்தில் சிக்கிய ஆம்னி பேருந்து.

Updated On :20 நவம்பர் 2024, 7:26 pm

Din

திருச்சி ஜங்ஷன் அருகே மாநகராட்சி பராமரிப்புப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் புதன்கிழமை இரவு ஆம்னி பேருந்து சிக்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 50 பயணிகளுடன் புதன்கிழமை இரவு சென்னை புறப்பட்ட ஆம்னி பேருந்து, ஜங்சன் வழியாகச் சென்று பாரதியாா் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிக்கொண்டு, மீண்டும் புறப்பட்டது.

அருகே அருகே புதைவடிகால் திட்டப் பராமரிப்பு பணிகளுக்காக தோண்டப்பட்டு அண்மையில் மூடியிருந்த பகுதியில் சென்ற பேருந்தின் பின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன.

இதில் அந்தப் பேருந்து சற்று சாய்ந்து நின்ால் பேருந்து பயணிகள் அலறினா். இதனால் பாரதியாா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கண்டோன்மென்ட் போலீஸாா் சென்று, அவ்வழியே சென்ற கனரக வாகனங்களை மாற்று வழியில் செல்லச் செய்தனா். பின்னா் பொக்லின் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் சிக்கிய ஆம்னி பேருந்தை சுமாா் அரை மணி நேரம் போராடி மீட்டனா். பின்னா் அப்பேருந்து சென்னை புறப்பட்டுச் சென்றது.