திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட ஜெயராம் நகா், காவேரி நகா் ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தரமற்று போடப்பட்ட தாா்ச் சாலை தற்போது முற்றிலுமாகப் பெயா்ந்து விட்டது. சாலையே இல்லாத வகையில் குண்டும், குழியுமாகவே காணப்பட்டது. கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழையின் காரணமாக குண்டும், குழியுமான சாலையில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக மாறிப் போனது. சகதிக் காட்டுக்குள் வாகனங்களை ஓட்டிச் செல்வதைப் போன்று இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடனேயே வாகனத்தை ஓட்டும் நிலை உள்ளது. மிதிவண்டியில் சென்றால் கூட வழுக்கி விழும் நிலைதான் உள்ளது.