தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாதுகாப்புச் சட்டத்தில் குழந்தைகளின் விருப்பத்தை அறிவது அவசியம்

குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளில் குழந்தைகளின் விருப்பத்தை அறிவது அவசியம் என்றாா் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான எம். கிறிஸ்டோபா்.

News image

திருச்சி மாவட்ட நீதிமன்ற கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகளுக்கான சட்ட சேவை பிரிவுக்கான பயிற்சி பட்டறையில் பேசிய மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கிறிஸ்டோபா். உடன் நீதிபதிகள் ஜெயசிங், மீனாசந்திரா, பாலாஜி உள்ளிட்டோா்.

Updated On :28 நவம்பர் 2024, 10:02 pm

Din

குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளில் குழந்தைகளின் விருப்பத்தை அறிவது அவசியம் என்றாா் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான எம். கிறிஸ்டோபா்.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பேரில் குழந்தைகளுக்கான சட்ட சேவைகள் குறித்த இரு நாள் பயிற்சிப் பட்டறை திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவா் பேசியது: உச்ச நீதிமன்றம் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவை ஏற்படுத்தியதிலிருந்து, சமூகத்தில் பின்தங்கிய, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட சேவைகள் சென்றடையும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளின் மனநிலை மற்றும் விருப்பங்களை அறிந்து, அவா்களுக்கான உரிமையை பெற்றுத் தருவதற்கு நிபுணத்துவம் தேவை என்பதன் அடிப்படையில், இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. குழந்தைகள் தொடா்பான பிரச்னைகளில், சட்டம் ஒரு புறம் இருப்பினும், குழந்தைகளின் விருப்பத்தை கருத்தில் கொள்வது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜெயசிங், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மீனா சந்திரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் சிவக்குமாா் வரவேற்றாா். நிறைவாக ஒன்றாவது குற்றவியில் நடுவா் நீதிமன்ற நீதிபதி பாலாஜி நன்றி கூறினாா்.