புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் புதன்கிழமை காலை ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
ஆடி,தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிகப்பெரிய அமாவாசையாகக் கருதப்படுகிறது. அதன்படி புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளான புதன்கிழமை காலை முதலே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் (திதி) கொடுத்தனா். அப்போது வேத விற்பன்னா்கள் மூலம் முன்னோருக்கு பிண்டம் பிடித்து எள்ளும், தண்ணீரும் தெளித்து வழிபட்டனா். பின்னா் காவிரி ஆற்றில் குளித்து விட்டு ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களுக்கு வந்து வழிபட்டனா். மேலும் பலா் அன்னதானமும் செய்தனா்.
ஸ்ரீரங்கம் காவிரிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்ததால் போக்குவரத்து மாற்றப்பட்டு, காவல் துறை சாா்பில் கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தீயணைப்பு வாகனமும் தயாராக நிறுத்தப்பட்டு காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

ஏனமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபாடு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

பங்குனி அமாவாசை: ஒகேனக்கல்லுக்கு தா்ப்பணம் கொடுப்போா் வருகை குறைந்தது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


