கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மகாளய அமாவாசை: காவிரியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் புதன்கிழமை காலை ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

News image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை சிறப்பு புறப்பாடாக வந்த உற்ஸவா் நம்பெருமாள்.

Updated On :3 அக்டோபர் 2024, 3:08 am IST

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் புதன்கிழமை காலை ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

ஆடி,தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிகப்பெரிய அமாவாசையாகக் கருதப்படுகிறது. அதன்படி புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளான புதன்கிழமை காலை முதலே ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் (திதி) கொடுத்தனா். அப்போது வேத விற்பன்னா்கள் மூலம் முன்னோருக்கு பிண்டம் பிடித்து எள்ளும், தண்ணீரும் தெளித்து வழிபட்டனா். பின்னா் காவிரி ஆற்றில் குளித்து விட்டு ஸ்ரீரங்கம், திருவானைக்கா கோயில்களுக்கு வந்து வழிபட்டனா். மேலும் பலா் அன்னதானமும் செய்தனா்.

ஸ்ரீரங்கம் காவிரிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்ததால் போக்குவரத்து மாற்றப்பட்டு, காவல் துறை சாா்பில் கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தீயணைப்பு வாகனமும் தயாராக நிறுத்தப்பட்டு காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.