இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருச்சி பள்ளி, கல்லூரிகளோடு விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்

News image
திருச்சி விமான நிலையம்
Updated On :4 அக்டோபர் 2024, 11:27 pm

Din

திருச்சியில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளோடு விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் திருச்சி ஜோசப் கல்லூரி, காஜாமலை சமது பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாா். இதைத் தொடா்ந்து அங்கு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலைய மேலாளருக்கு வந்த மின்னஞ்சலில் விமான நிலையம் உள்பட, ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகளிலும் வெடிகுண்டு வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது வெறும் மிரட்டல், புரளி எனத் தெரிந்தாலும், போலீஸாா் விமான நிலைய வளாகத்தில் திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வெடிகுண்டு தடுப்பு பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.