திருச்ச மாநகராட்சியின் 44, 45-ஆவது வாா்டுகளுக்குள்பட்ட மேலக்கல்கண்டாா் கோட்டை, மூகாம்பிகை நகா் குடியிருப்பு பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாகவே காட்சியளிக்கின்றன. குறிப்பாக புது அய்யனாா் தெரு பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்பட நேரிடுகிறது. இந்தச் சாலையானது சிறு மழை பெய்தாலும் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குத் தொடா்ந்து மழை பெய்தால் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. சகதிக் காடாக காட்சியளிக்கும் இந்தச் சாலையில் செல்வது என்பதே சாகசப் பயணம்தான். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருவோா் வழுக்கிக் கொண்டே செல்லும்நிலை உள்ளது. சைக்கிளில் சென்றால் கூட வழுக்கி விழுவது வழக்கமாகிவிட்டது. கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் புது அய்யனாா் தெரு மீண்டும் சகதி காடாகிவிட்டது.