ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சி அருகே கல்லூரி மாடியிலிருந்து குதித்து மாணவா் தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூா் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:02 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூா் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அழகு மணிகண்டன் (20), சிறுகனூா் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா், அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருடன் பழகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அம்மாணவி அவரிடம் பேச மறுத்துள்ளாா். இதனால் விரக்தியடைந்த அம்மாணவா் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாடியிலிருந்து குதித்தாா்.

இதில், படுகாயமடைந்த அவரை அருகில் உள்ள இருங்களுா் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு இருந்த மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்ததில், அழகு மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து நிகழ்விடத்துக்குச் சென்ற சிறுகனூா் காவல் துறையினா் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் உயிரிழந்த கல்லூரி மாணவா் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.