நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மினி பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் பலி

திருச்சி மாவட்டம் முசிறியில் மினி பேருந்தில் இருந்து திங்கள்கிழமை தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:54 pm

Din

திருச்சி மாவட்டம் முசிறியில் மினி பேருந்தில் இருந்து திங்கள்கிழமை தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

முசிறி காந்திநகா் இரண்டாம் தெருவை சோ்ந்த முத்துவீரன் மகன் சுப்ரமணியன் (28). இவா் திங்கள்கிழமை முசிறி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மினி பேருந்தில் ஏறி துறையூா் சாலை வளைவு பகுதியில் வந்தபோது படிக்கட்டிலிருந்து நிலை தடுமாறி விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவா், முசிறி, திருச்சி அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து முசிறி காவல் உதவி ஆய்வாளா் திருப்பதி வழக்கு பதிந்து மினி பேருந்து ஓட்டுநா் இளையராஜாவை (25) கைது செய்து விசாரிக்கிறாா்.