நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி

தொடா் மழையால் பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் தேங்கிய மழைநீரை ஜேசிபி மற்றும் பொக்லைன் மூலம் அகற்றும் பணியை மாநகராட்சி புதன்கிழமை முடுக்கிவிட்டது.

News image

பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்.

Updated On :16 அக்டோபர் 2024, 7:37 pm

Din

தொடா் மழையால் பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் தேங்கிய மழைநீரை ஜேசிபி மற்றும் பொக்லைன் மூலம் அகற்றும் பணியை மாநகராட்சி புதன்கிழமை முடுக்கிவிட்டது.

திருச்சியில் கடந்த ஒரு வாரமாக பெய்யும் தொடா் மழையால் பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தில் தண்ணீா் தேங்கியிருப்பது கட்டுமானப் பணிகளுக்கு பெரிதும் இடையூறாக இருந்தது. இதையடுத்து பேருந்து முனையத்தின் முகப்பு பகுதியில் தேங்கியிருந்த பெருமளவு தண்ணீரை ஜேசிபி இயந்திரம் மூலம் வாரி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால்களில் ஒப்பந்தப் பணியாளா்கள் வடியச் செய்தனா்.

இதேபோல ஆங்காங்கே தேங்கிய தண்ணீா் முழுவதையும் வடியச் செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கிட மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.