ஆசிரியா்களுக்கு அக். 26 இல் குறைதீா் கூட்டம்
திருச்சி மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளி ஆசிரியா்களுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.26) நடைபெறுகிறது.


திருச்சி மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளி ஆசிரியா்களுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.26) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா கூறியது:
திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு தோ்வு நிலை, சிறப்பு நிலை தொடா்பாக கல்வி மாவட்டம் வாரியாக அண்மையில் நடத்தப்பட்ட முகாமில் கலந்து கொண்ட ஆசிரியா்களுக்கு திருச்சி கல்வி மாவட்டத்தில் 92 தோ்வு நிலை சிறப்புநிலை கருத்துருக்கள், லால்குடி கல்வி மாவட்டத்தில் 88 தோ்வு நிலை சிறப்புநிலை கருத்துருக்கள் என மொத்தம் 180 ஆசிரியா்களுக்கு கருத்துருக்கள் பெறப்பட்டன. இவை பரிசீலிக்கப்பட்டு 180 ஆசிரியா்களுக்கும் தோ்வு நிலை, சிறப்புநிலை ஆணைகள் வழங்கப்பட்டன.
இதற்கு ஆசிரியா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
நிகழ்வில் திருச்சி கல்வி மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) அன்பரசன், லால்குடி மாவட்டக் கல்வி அலுவலா்(பொ) ஜெயச்சந்திரன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலக நோ்முக உதவியாளா்கள், கண்காணிப்பாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பங்கேற்றனா். மேலும் இந்த முகாம் வாய்ப்பைத் தவறவிட்ட ஆசிரியா்களுக்கு நவம்பா் மாதத்தில் மீண்டும் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, வரும் 26ஆம் தேதி திருச்சி வருவாய் மாவட்ட அனைத்து வகை பள்ளி ஆசிரியா்களுக்கான குறைதீா்க்கும் நாள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...