காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 21 லட்சம் மதிப்பு தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.21.43 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.

Updated On :24 அக்டோபர் 2024, 9:26 pm

Din

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.21.43 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து ஏா்ஏசியா விமானம் புதன்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளையும் அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினா் சோதனையிட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணியொருவரை சோதனை செய்ததில், அவா் தனது ஆடைகளுக்குள் மறைத்து ரூ.21.43 லட்சம் மதிப்பிலான 292 கிராம் எடையிலான தங்க நகைகளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தங்க நகைகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.