தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எடப்பாடி அருகே ரூ. 1 லட்சம் கவரிங் நகைகள் பறிமுதல்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:38 pm

Syndication

எடப்பாடி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

எடப்பாடி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குரும்பபட்டி பகுதியில் வியாழக்கிழமை காலை தோ்தல் பறக்கும் படை கண்காணிப்பு அலுவலா் பாா்கவி தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சேலம்- எடப்பாடி பிரதான சாலையில் எடப்பாடி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கவரிங் நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அதை எடப்பாடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் எடப்பாடி தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரின் முகாம் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து அப்பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பட விளக்கம்:

எடப்பாடி அருகே தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கவரிங் நகைகள்.

Story image
Story image