காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினா்.

Updated On :24 அக்டோபர் 2024, 9:39 pm

Din

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரியம் ஊழியா்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அந்த இயக்கத்தின் மாநில ஆலோசகா் ச.இ. கண்ணன் தொடக்கி வைத்து பேசினாா்.

போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.எஸ்.இன்பராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு த.ராஜ்மோகன், தேசிய ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலாளா் ப.ஆறுமுகம், தமிழ்நாடு வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் சங்க மாவட்டச் செயலாளா் ப.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.