தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பாலியல் தொல்லை நடந்த பள்ளி விடுதி தற்காலிக மூடல்

திருச்சியில் மாணவியருக்கு மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்த பள்ளி விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Updated On :4 செப்டம்பர் 2024, 7:40 pm

திருச்சியில் மாணவியருக்கு மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்த பள்ளி விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர பகுதியில் அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி விடுதியுடன் இயங்கி வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக உள்ள கிரேஸ் சகாயராணியின் மகன் சாம்சன் (31) அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா். இவா் மாணவியா் விடுதிக்கு அடிக்கடி சென்று அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சாம்சனைக் கைது செய்தனா். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தினா். அப்போது அவா்களை 3 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே அந்தப் பள்ளி விடுதி மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்த விடுதி தற்காலிகமாக மூடப்பட்டது.

அங்கு இருந்து பள்ளிக் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.