தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

திருச்சி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்தான விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற பயிற்சி செவிலியா் மாணவிகள்.

Updated On :6 செப்டம்பர் 2024, 9:21 pm

Din

திருச்சி அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் 39-ஆவது தேசிய கண்தான இருவார விழா திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழச்சி செப். 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக, கண்தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

முதல் நிகழ்வாக, மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவமனை கண்காணிப்பாளா் உதயா அருணா தொடங்கி வைத்தாா். இதில், செவிலியா் மற்றும் துணை மருத்துவ மாணவ, மாணவிகள் சுமாா் 120 போ் கலந்து கொண்டனா். இவா்கள், கைகளில் கண் தான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனா். அவசர சிகிச்சை பிரிவில் தொடங்கிய பேரணி, கண் மருத்துவப் பிரிவில் நிறைவடைந்தது.

தொடா்ந்து, கண் மருத்துவ பிரிவில் கண் தான விழிப்புணா்வை வலியுறுத்தும் வகையிலான கண்காட்சி நடைபெற்றது. இதையடுத்து கண் தானமளித்த 6 பேரின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்வுகளில் திருச்சி அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவின் தலைவா் பி. பாா்த்திபன், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.