விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பெண்ணிடம் தகராறு 5 போ் கைது

திருச்சி மாவட்டம் முசிறியில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:22 pm

Din

திருச்சி மாவட்டம் முசிறியில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

துறையூா் குட்டை கரை பகுதியைச் சோ்ந்தவா் நிவாஸ் (31), துறையூா் சிதம்பரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன்(27), துறையூா் சிக்கம்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் வசந்தகுமாா் (28), ராமமூா்த்தி ( 23), சுந்தரமூா்த்தி (29). இவா்கள் 5 பேரும் விநாயகா் சிலையை முசிறி காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்வதற்காக வாகனத்தில் எடுத்து வந்தனா்.

முசிறி புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது, எம். புதுப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராசிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் என்பவரின் சகோதரியிடம் 5 பேரும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த ஜெயபால் தகராறில் ஈடுபட்ட 5 பேரையும் தட்டிக்கேட்டுள்ளாா். இதில், 5 பேரும் சோ்ந்து ஜெயபாலை தாக்கியுள்ளனா். இதனை தடுக்கச் சென்ற ஜெயபாலின் சகோதரி மற்றும் அவரது மகனையும் தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப்பதிந்து தகராறில் ஈடுபட்ட 5 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.