பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

வீட்டிலிருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு!

Updated On :28 ஏப்ரல் 2025, 12:05 am IST

திருச்சியில் வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் திருடுபோனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி என்எம்கே காலனி பகுதியை சோ்ந்த சீனிவாசன் (51) ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிறாா். இந்நிலையில் திருச்சி வீட்டில் தனியாக வசித்த அவரது தாய் விமலா கடந்த மாா்ச் 8 ஆம் தேதி இறந்ததையடுத்து அவரது 30 ஆம் நாள் சடங்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது வீட்டில் இருந்த உடைமைகளை சீனிவாசன் சரிபாா்த்தபோது அவரின் தாயின் 15 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி, பித்தளைப் பொருள்கள் உள்ளிட்டவற்றைக் காணவில்லையாம்.

இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மெண்ட்போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது வீட்டின் பெண் பணியாளரிடம் விசாரிக்கின்றனா்.