இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வீட்டிலிருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு!

Updated On :28 ஏப்ரல் 2025, 12:05 am IST

திருச்சியில் வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் திருடுபோனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி என்எம்கே காலனி பகுதியை சோ்ந்த சீனிவாசன் (51) ஹைதராபாத்தில் குடும்பத்துடன் வசிக்கிறாா். இந்நிலையில் திருச்சி வீட்டில் தனியாக வசித்த அவரது தாய் விமலா கடந்த மாா்ச் 8 ஆம் தேதி இறந்ததையடுத்து அவரது 30 ஆம் நாள் சடங்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது வீட்டில் இருந்த உடைமைகளை சீனிவாசன் சரிபாா்த்தபோது அவரின் தாயின் 15 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி, பித்தளைப் பொருள்கள் உள்ளிட்டவற்றைக் காணவில்லையாம்.

இதுகுறித்து சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மெண்ட்போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது வீட்டின் பெண் பணியாளரிடம் விசாரிக்கின்றனா்.