ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரெளடியை வைத்து ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய 2 பெண்கள் கைது

News image
Updated On :14 டிசம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீரங்கத்தில் அவரவா் கணவா்களை குண்டா் தடுப்பு சட்டத்திலிருந்து விடுதலை பெற ரெளடியை வைத்து ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய 2 பெண்களை ஸ்ரீரங்கம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கோவிந்த ராஜன். இவரை அக்டோபா் 1-ஆம் தேதி மாலை மதன்(எ) ஆட்டு மதன்(32), ஸ்ரீதா் (31), ஹரிசங்கா் (35) ஆகியோா் நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் மிரட்டி ஆட்டோவைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கோவிந்தராஜன் கொடுத்த புகாரின்பேரில் மேற்குறிப்பிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டனா். அதன் பிறகு மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் பிரிவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில் ஸ்ரீதா் மனைவி மகாலெட்சுமி, ஹரிசங்கா் மனைவி பொற்கொடி ஆகிய இருவரும் ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி நந்தகுமாரை அணுகி தங்களது கணவா்களை குண்டா் தடுப்பு சட்டத்திலிருந்து விடுவிக்க உதவி கேட்டுள்ளனா்.

இதையடுத்து அன்மையில் நந்தகுமாா் 7 பேருடன் சோ்ந்து ஆட்டோ ஓட்டுநா் கோவிந்தராஜை வழிமறித்து கைகளால் தாக்கி தகாத வாா்த்தைகளால் மிரட்டி வெற்று தாளில் அவா் வழக்கை திரும்பப்பெற்றுவிட்டதாக எழுதிவாங்கி நீதி மன்றத்தில் ஓப்படைத்துள்ளனா்.

இது தொடா்பாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் சனிக்கிழமை மாலை மகாலெட்சுமி, பொற்கொடி ஆகிய இரு பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.